இறைவன் என்பீர்கள்
வாய் நிறைய
நிதர்சனத்தில்
பாவம் அந்த கடவுள்
தினம் தினம்
மார் பிடித்து இழுத்து
வெடுக் வெடுக்கென
முளை காம்பிழுத்து
நா ருசிப்பீர்கள்
உடல் வளர்ப்பீர்கள்
வா வந்து
என் மார் வருடு
அதை தீண்டித் திளை
தொட்டு ரசி
அருந்தி மகிழ் என்று
விரும்பி வந்து
பால்மடி காட்டியதா? பசு
இப்படி ஒரு பக்தன்
எந்த கடவுளுக்கு வாய்ப்பான்
இது வதை என்று
தெரியவில்லையா?
ருசிக்கு ஒருவேளை பாலின்றி
இருந்திடுமா?
தடை சொல்லும் - உங்கள்
பணம் படைத்த தடித்த நாக்குகள்?
தடை விதிப்பதற்கு முன்னால்
No comments:
Post a Comment