படாரென்று பெரும்சப்தம்……………..
சற்று நேரத்தில் அந்த சாலையில் ஒருவன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தான். தார்சாலையின் பள்ளங்களையெல்லாம் அவன் ரத்தம் ஆக்கிரமிக்க விரைந்தோடுகிறது. சில விநாடிகளுக்குள் அவனை சுற்றிவிட்டது பெருங்கூட்டம். என்ன செய்வதென்று புரியாது சிலர், என்ன செய்வதென்றே தெரியாத பலர், ஆளுக்கு ஒரு அலைபேசியில் ஆம்புலன்ஸை தொடர்புகொள்ள முயற்சிக்கும் சிலர், ‘அய்யோ பாவம்!’, ‘பாக்க சிறுவயசாவுள்ள தெரியது' என்று துடிதுடிப்பவனுக்காக இரக்கபட நாலுபேர் என அந்த பெருங்கூட்டம் கூடியிருந்தது பெருவட்டமாய். அவன் அந்த தார்சாலையிலேயே கிடந்தான், இடதுகால் ஒருபக்கமாக இழுத்துகொண்டேயிருந்தது. கண்கள் அசையாதிருந்தது, வானையே வெறித்து பார்த்து கொண்டிருந்தான், விழிதிரை அவன் கடந்த காலத்தை கட்ட கடைசியாக ஒருமுறை அவனுக்கு திரையிட்டு காண்பிக்க காட்சிகளை உள்ளுக்குள் திரட்ட துவங்கியது. அவன் உடலிலிருந்து எங்கெங்கோ குபுக்…..குபுக்….. என்று குருதி கொப்பளித்து வெளியேறி கொண்டிருந்தது. தொண்டைகுழி கடைசி சொட்டு தண்ணீருக்கு ஏங்கி துடியாய் துடித்தது. கிட்டத்தட்ட அவன் இறுதி மூச்சை சுவாசித்து கொண்டிருந்தான்.
எங்கிருந்தோ ஓர் மகாத்மா வந்தான் அந்த கூட்டத்தை முன்டிதள்ளிக்கொண்டு. எப்படியோ அந்த பெருவட்டத்தின் மையத்தை வந்தடைந்தவன், ரத்த வெள்ளத்தில் கிடந்தவனை ஒருமுறை பார்த்தான். அவனுக்காக இரக்கபடுகிறான் என்பதை அவன் முகம் காட்டியது. சுற்றி நிற்பவர்களை ஒருமுறைபார்த்தான், அப்போது இரக்கம் கோபமாக உருமாறியது, பெருமூச்சிவிட்டான் இந்த சமூகத்தை நினைத்து, உஷ்னம் தெரித்தது. மனிதர்களை நினைத்து சலித்துக்கொண்டவன் தன் பாக்கெட்டுக்குள் கைவிட்டான். மீண்டும் ஒருமுறை சுற்றத்தைப் பார்த்தான். மெள்ள வெளியில் எடுத்தான் அவன் கைகளுக்குள் அடங்கிவிடாத அந்த கைபேசியை. இருகரங்களிலும் அதை பற்றினான், ரத்தவெள்ளத்தில் கீழே கிடப்பவனை ஒரு படம் பிடித்தான் ‘கிரீச்' என்று ஒரு சத்தத்தோடு, சட்டென்று அருகிலிருந்தவர்கள் அவனை நோக்கினார்கள். அவன் யாரையும் பொருட்படுத்தவில்லை, எதையும் பொருட்படுத்தவில்லை. மீண்டும் ஒருமுறை காமிரா பொத்தனை அழுத்தினான், இந்தமுறை ‘கிரீச்' என அது சத்தமிட்டபோது வேடிக்கைபார்க்கும் அந்த பெருங்கூட்டத்தின் ஒருபகுதியை அது படம்பிடித்திருந்தது. மீண்டும் முட்டி மோதிகொண்டு வட்டத்தை உடைத்து வெளியேறினான். நிழல் தேடி தன்னை அசுவாசபடுத்திகொண்டான். பின்னர் தன் முகநூல் பக்கத்திற்குள் நுழைந்தான், படங்களை ஒருமுறை சரிபார்த்துவிட்டு பதிவேற்றினான் “மனிதம் மரித்துப்போய்விட்டது” என்ற தலைப்போடு..........
சற்று நேரத்தில் அந்த சாலையில் ஒருவன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தான். தார்சாலையின் பள்ளங்களையெல்லாம் அவன் ரத்தம் ஆக்கிரமிக்க விரைந்தோடுகிறது. சில விநாடிகளுக்குள் அவனை சுற்றிவிட்டது பெருங்கூட்டம். என்ன செய்வதென்று புரியாது சிலர், என்ன செய்வதென்றே தெரியாத பலர், ஆளுக்கு ஒரு அலைபேசியில் ஆம்புலன்ஸை தொடர்புகொள்ள முயற்சிக்கும் சிலர், ‘அய்யோ பாவம்!’, ‘பாக்க சிறுவயசாவுள்ள தெரியது' என்று துடிதுடிப்பவனுக்காக இரக்கபட நாலுபேர் என அந்த பெருங்கூட்டம் கூடியிருந்தது பெருவட்டமாய். அவன் அந்த தார்சாலையிலேயே கிடந்தான், இடதுகால் ஒருபக்கமாக இழுத்துகொண்டேயிருந்தது. கண்கள் அசையாதிருந்தது, வானையே வெறித்து பார்த்து கொண்டிருந்தான், விழிதிரை அவன் கடந்த காலத்தை கட்ட கடைசியாக ஒருமுறை அவனுக்கு திரையிட்டு காண்பிக்க காட்சிகளை உள்ளுக்குள் திரட்ட துவங்கியது. அவன் உடலிலிருந்து எங்கெங்கோ குபுக்…..குபுக்….. என்று குருதி கொப்பளித்து வெளியேறி கொண்டிருந்தது. தொண்டைகுழி கடைசி சொட்டு தண்ணீருக்கு ஏங்கி துடியாய் துடித்தது. கிட்டத்தட்ட அவன் இறுதி மூச்சை சுவாசித்து கொண்டிருந்தான்.
எங்கிருந்தோ ஓர் மகாத்மா வந்தான் அந்த கூட்டத்தை முன்டிதள்ளிக்கொண்டு. எப்படியோ அந்த பெருவட்டத்தின் மையத்தை வந்தடைந்தவன், ரத்த வெள்ளத்தில் கிடந்தவனை ஒருமுறை பார்த்தான். அவனுக்காக இரக்கபடுகிறான் என்பதை அவன் முகம் காட்டியது. சுற்றி நிற்பவர்களை ஒருமுறைபார்த்தான், அப்போது இரக்கம் கோபமாக உருமாறியது, பெருமூச்சிவிட்டான் இந்த சமூகத்தை நினைத்து, உஷ்னம் தெரித்தது. மனிதர்களை நினைத்து சலித்துக்கொண்டவன் தன் பாக்கெட்டுக்குள் கைவிட்டான். மீண்டும் ஒருமுறை சுற்றத்தைப் பார்த்தான். மெள்ள வெளியில் எடுத்தான் அவன் கைகளுக்குள் அடங்கிவிடாத அந்த கைபேசியை. இருகரங்களிலும் அதை பற்றினான், ரத்தவெள்ளத்தில் கீழே கிடப்பவனை ஒரு படம் பிடித்தான் ‘கிரீச்' என்று ஒரு சத்தத்தோடு, சட்டென்று அருகிலிருந்தவர்கள் அவனை நோக்கினார்கள். அவன் யாரையும் பொருட்படுத்தவில்லை, எதையும் பொருட்படுத்தவில்லை. மீண்டும் ஒருமுறை காமிரா பொத்தனை அழுத்தினான், இந்தமுறை ‘கிரீச்' என அது சத்தமிட்டபோது வேடிக்கைபார்க்கும் அந்த பெருங்கூட்டத்தின் ஒருபகுதியை அது படம்பிடித்திருந்தது. மீண்டும் முட்டி மோதிகொண்டு வட்டத்தை உடைத்து வெளியேறினான். நிழல் தேடி தன்னை அசுவாசபடுத்திகொண்டான். பின்னர் தன் முகநூல் பக்கத்திற்குள் நுழைந்தான், படங்களை ஒருமுறை சரிபார்த்துவிட்டு பதிவேற்றினான் “மனிதம் மரித்துப்போய்விட்டது” என்ற தலைப்போடு..........
This comment has been removed by the author.
ReplyDeleteThalaivare Ungalin Padaippugalai Edhir Paarthu Kathirukkum Ungal Shiya Pillai..... Migavum Arumai.....
ReplyDeleteநன்றியா
ReplyDeleteAwesome ji... Keep going...
ReplyDeleteகண்டிப்பா
Deleteஇந்த எளிய நடையை தொடர்க ,சிறப்பு
ReplyDeleteநிச்சயமா
Delete