Monday, 5 June 2017

பள்ளிக்கூடம்; ஐனநாயகம் மறுக்கப்படுமிடம்


1927-ல் கட்டப்பட்ட ஒரு கல்வி மாநாட்டுக்குக் காந்தியடிகள் வந்தார். வரும் வழியில் இருந்த ஒரு பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்தார். காந்தியிடம் ஆசிரியர்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டார்கள். “நான் ஆங்கிலப் பாடத்தோடு சம்பந்தப்பட்டவன்”  “நான் அறிவியல் பாடத்தோடு சம்பந்தப்பட்டவன்'’ ‘'நான் கணிதத்தோடு சம்பந்தப்பட்ட ஆசிரியர்’' என்று அவர்கள் தங்களை அறிமுகம் செய்துகொண்டபோது காந்தி கேட்டாராம் “அப்படியானால் இங்கே குழந்தை களோடு சம்பந்தப்பட்டவர்கள் யாருமே இல்லையா?' என்று. அந்த கேள்வியை இன்றும் கூட கேட்கலாம்தானே?

‘கையை கட்டு'
‘வாயை மூடு'
‘க்ளாஸ் சைலன்ஸ்'
நாம் எல்லோரும் இந்த வசனங்களை பள்ளி காலகட்டங்களில் கேட்டிருக்க கூடும். நான் கேட்டிருக்கிறேன், ஏன்? என் பிள்ளைகளும் கூட எதிர்காலத்தில் கேட்க நேரும். அந்த சைலன்ஸை ஆசிரியர்  உரக்க கத்தி சொல்லிவிட்டு மேசையின் மீது ஒரு அடி அடிப்பார். அந்த ஓசை அறை முழுவதும் எதிரொலித்து எல்லா செவிகளுக்குள்ளும் நுழைந்து ஒரு அமைதியை செயற்கையாக  உருவாக்கும். அமைதி என்பது எல்லோரும் விரும்புகிற ஒன்று, ஆனால் அந்த அமைதியானது இயற்கையாக நிகழ்கிறதா இல்லை அடக்குமுறையின்பால் நிகழ்கிறதா என்பது கேள்விக்குட்படுத்தப்பட வேண்டியது. செயற்கையான அந்த அமைதி அதிகாரம் பொருந்திய ஆதிக்க கட்டளையால் நிகழ்வது. அதன் பின்னால்  நீண்ட சம்பாஷனை நிகழும் பாடம் எடுக்கிறேன் என்கிற பெயரில். இடையில் தண்ணீர் குடிக்கவோ, சிறுநீர் கழிக்கவோ ஏன் சந்தேகம் கேட்க கூட மானவர்களை பெரும்பாலும் ஆசிரியர்கள் அனுமதிப்பதில்லை. கொடுக்கபட்ட கால அவகாசத்திற்குள் பாடங்களை முடிப்பதே தங்களின் தலையாய கடமை என நினைக்கும் ஆசிரியர்களே இன்று அதிகம். பாடம் எடுக்கிற வேளையில் ஏற்படுகிற சந்தேகத்தை அக்கனமே தீர்க்க பலர் முயல்வதில்லை மாறாக, வகுப்பு முடிகின்ற வேளையிலே வாய்ப்புகள் வழங்கபடுகிறது. அந்த குறைந்த கால அவகாசத்திலே சந்தேகங்களை கேட்பதற்கும், கேள்விகள் எழுப்புவதற்கும் மானவர்கள் அனுமதிக்கபடுகிறார்கள். இடைபட்ட நேரத்தில் சந்தேகம் எதன்மீது என்றே சந்தேகிக்கிற வகையில் பல தலைப்புகளை தாண்டி அந்த வகுப்பு கடந்து வந்திருக்கும். இப்படியாக என்னற்ற பல கேள்விகளும், சந்தேகங்களும் தீர்க்கபடாமலே மறக்கடிக்கபட்டிருக்கிறது பல வகுப்புகளில். இதுபோன்ற செயல்பாடுகள் மானவர்களின் அடிப்படை இயல்பான கேள்வி கேட்கும் பண்பையே  மலுங்கடிக்கிறது. பள்ளிகளிலும் சரி, கல்லூரிகளிலும் சரி அதன் வகுப்பறையில் ஐனநாயகம் என்பது இருப்பதே இல்லை, அது இன்று வரை தொடர்வது இந்த சமூகத்தின் சாபம். 

எத்தனை அழுத்தத்தை இன்றைய பள்ளி மானவ மானவியர்கள் மீது நாம் சுமத்துகிறோம். மூன்றாம் வகுப்பு பயில்கிற ஒரு மானவனை தேர்வு எழுதுகிற போது எது தவறு செய்ய வைக்கிறது? அந்த வயதில் ஒருவனை தவறு செய்ய தூண்டுகிற இந்த பள்ளி அமைப்பு எப்படி நேர்மையான, அறம் சார்ந்த மனிதர்களை உருவாக்கும். இந்த நேரத்தில்தான் நீர் அருந்த வேண்டும், இந்த நேரத்தில் தான் சிறுநீரோ மலமோ கழிக்க வேண்டும் ஏனைய நேரங்களில் பொருத்துக் கொண்டிரு என்பது எத்தனை கொடிய அடக்குமுறை. எத்தனை பகீரங்கமான மனித உரிமை மீறல் இது. இயற்கையாக உடலில் வேண்டிய நேரத்தில், வேண்டியவற்றை சேர்க்கவும், வெளியேற்றவும் இதுதான் நேரம் என்று இந்த அமைப்பு எப்படி நேரம் வகுக்கிறது, விதிக்கிறது . மனித உடல் தேவை எல்லோருக்கும் ஒரேநேரத்தில்  ஒன்றுபோல இருப்பதில்லை. எல்லோரது உடற்கூறுகளும் ஒன்று போல இயங்குவதில்லை. இதை ஏன் ஆசிரிய பெருமக்களும்,  நிர்வாக அமைப்புகளும் உணர மறுக்கின்றன. பாட வேளையில் தாகம் எடுக்கிற ஒரு மானவிக்கு தண்ணீர் அருந்த இந்த அமைப்பு அனுமதிக்கிறதா? மூத்திரம் முட்ட நெழிகிற ஒரு மானவனை அடக்கி கொள் என்று தானே சொல்கிறது. இதுதனே பல பள்ளிகளின்  விதிமுறையாக இருக்கிறது. மூத்திரம் முட்ட நெழிபவனை அடக்குகிற செயல் எப்படி விதிமுறையாகும்? அது எந்தவிதத்தில் ஒருவரை ஒழுக்கமுடையவராக ஊருக்குக்காட்டும்.  இது அப்பட்டமான அருவருக்கத்தக்க, மனிதாபிமானமற்ற, சர்வாதிகார போக்கு.
இருபாலர் பயிலும் பள்ளிகளின் நிலைபாடோ இன்னும் கொடூரம், குரூரம். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. சிறுவயதில் ஒருமுறை வகுப்பில் பேசிக் கொண்டிருந்ததற்காக எனக்கு கொடுக்கபட்ட தண்டனை, இரண்டு பெண்களுக்கு மத்தியில் நாள் முழுதும் அமர்ந்திருக்க  வேண்டும் என்பது. நான் நெழிந்தேன், அசொகரியமாக உணர்ந்தேன், எல்லோரும் பகடி செய்தார்கள்  தனித்துவிடபட்டேன் அந்த சம்பவம் உருவாக்கிய அவமானத்தையும், அது தந்த  வடுவையும் இன்றளவும் நான் சுமக்கிறேன். அதன் நீட்சி இன்றுவரை என்னால் பெண்களிடம் அத்தனை எளிதில் பேச இயலாது. இதுபோன்ற தண்டனைகள் ஒருவித உளவியல் தாக்குதல்.
பெண் என்பவள் எதிர் பாலினம், சக உயிர் என்ற புரிதலை ஏன் பள்ளிகள் விதைப்பதில்லை. பெண் உலகத்தை ஆண்களுக்கு புரியவைக்கின்ற இடம் பள்ளி கூடம் அப்படியாக பள்ளிகூடங்கள் இருக்கிறதா? அதிகமான பள்ளிகூடங்களில் ஆண்களும், பெண்களும் அந்தியபடுத்தப் படுகிறார்கள். பெண்களின் உலகத்தை ஆண்களிடம் கொண்டு செல்லாத வகுப்பறைகளே பெண்கள் மீது நிகழ்த்தபடுகிற தாக்குதல்களின் அடிநாதம். அதனை நிவர்த்துவதே பெண்களின் மீது நிகழ்த்தபடுகிற வன்முறைகளுக்கு  அடிப்படை தீர்வு. தனித் தனி வகுப்பறைகள், தனித் தனி வளாகங்கள், ஏன் தனித் தனி பள்ளி நேரங்கள் கொண்ட எத்தனை எத்தனையோ நிர்வாகங்கள் இன்று இருக்கிறது. இது அப்பட்டமான ஐனநாயக மீறல் இல்லையா? இன்று ஐனநாயகம் மறுக்கபடுகிற பள்ளிகள் இங்கு ஏராளம். அப்படியொரு பள்ளியில் நிகழ்ந்த ஒரு சம்பவம்  வருத்ததிற்கும், கண்டனத்துற்கும் உரியது. பதின் பருவத்தில் காதல் வயப்பட்ட  இருவரை பல நூறு மானவ மானவியர்களும் , ஆசிரியர்களும் கூடியிருந்த ஒரு வழிபாட்டு கூட்டத்தில் எல்லோர் முன்னாலும் மேடையில்  வைத்து அவமானபடுத்தியது அதிகார வர்க்கம். அவன் கூனிக்குருகி போனான், அவள் உடைந்து நொருங்கினாள் அவமானத்தில் கதறினாள். இத்தனை அவமானத்திற்கு பின்னால் அந்த  நிர்வாகம் இருவரையும் பள்ளியை விட்டே துரத்தியது, வெளியேற்றியது. அப்படி என்ன தவறு செய்துவிட்டார்கள் அவர்கள்? சரி  தவாறாகவே இருக்கட்டும் அதை கையாளுகிற முறை இதுதானா? பொதுவெளியில் பெருங்கூட்டத்திற்கு முன்னால் வைத்து அவமானப்படுத்துவதா சரியான  அனுகுமுறை? அதுவா அறம்?  இத்தனையும் நிகழ்த்தப்பட்டது தங்கள் நிர்வாகம் எத்தனை கண்டிப்பானது, எத்தனை ஒழுக்கமானது என்று ஊருக்கு உரக்க சொல்வதற்கு. இவர்களின் வியாபாரத்திற்கு இருவரின் மானத்தையும், இருகுடும்பத்தின் மரியாதையையும் பகடியாக்கியது நிர்வாகம். இத்தனை கொடிய வியாபாரிகளிடமே இன்றைய கல்வி துறை சிக்கி சீரழிந்து கிடக்கிறது. வேடிக்கை என்னவென்றால் அவர்களையே இந்த மக்கள் கூட்டம் மொய்த்து திரிவது.

இன்றை பள்ளிகூடங்கள் பிள்ளைகளிடம்  நல்லவைகளை விதைப்பதில்லை, அபத்தத்தை தினிக்கிறது. சமுக மனிதர்களாக உருவாக்காமல் சுயநலமிக்கவர்களாக உருவாக்குகிறது. அடிப்படையில் கேள்வி கேட்க கூடவிடமால் குரல்வளையை நெரித்து, உரிமை குரல்களை நசுக்குகிறது. எத்தனை பெரிய ஐனநாயக படுகொலை நிகழ்ந்தேரிக்கொண்டிருக்கிறது தினம் தினம் இந்த சர்வாதிகார அமைப்புகளால். பாவம் ஆசிரியர்கள் தெரிந்து பலரும்  தெரியாமலே சிலரும் அதற்கு துனைபோகிறார்கள். இன்று இந்த இழிநிலைக்கு நாம் வந்தடைந்திருப்பது இதன் நீட்சிதான் . நம் குரல்வளை பிஞ்சிலே நசுக்கபட்டதும், ஐனநாயகத்தின் வலிமையை உணரவிடாமல், கேள்வி கேட்க அனுமதிக்காமல் கட்டளைக்கு அடிபனிகிற வெற்று சதை பின்டங்களாக நம்மை இந்த நிர்வாகங்கள் உருவாக்கி வெளியேற்றியதும், அடிமைகளாக்கியதுமே இந்த இழி நிலைக்கு காரணம். இந்த நிலைமாற நிர்வாகங்கள் மாறுவதை காட்டிலும் நிர்வாகங்கள் நம்பியிருக்கிற உயிர் நாடிகள் மாறவேண்டும். ஆசிரியர்கள் மாற வேண்டும். எப்படிபட்டவர்களாக அவர்கள் மாறவேண்டும் என்று கேட்டால், காந்தி அன்று ஆசிரியர்களிடம் எந்த கேள்வியை முன்வைத்தாரோ, அதற்கான  விடையை இன்று கண்டெடுப்பதிலும், அந்த விடையாகவே ஆசிரியர்கள் வருங்காலங்களில் இருப்பதிலுமே சாத்தியமாகும்.

5 comments:

The lunch box

என் அம்மா எப்போதும் சொல்வார் “ சில நேரங்களில், ஒரு தவறான ரயிலால் கூட உங்களைச் சரியான  ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முடியும்” என்று ...