உன் வளைவு நெளிவுகளை
பார்ப்பதற்கும்
தொட்டு- காமத்தீ
குழிப்பதற்கும்தானா
இத்தனை
வளைவு நெளிவு கடந்து
வளைவு நெளிவு கடந்து
மலை உச்சியில்
குளிர்ந்து கிடக்கிறேன்
உன் மொத்தம் கண்டு
என் புத்தி பிரண்டு
சித்தம் கலங்கி
உன் பாதம் பனிந்து
அம்மம்மா! நீ
கட்டிலின்மேல் ராட்சசி
கட்டவிழ்க்காதே என்மேல்
காமத்தீ
ஐய்யையோ!
பகல் எது – இரவெது
பைத்தியம் பிடிக்கிறது
பாவம்! நானோர் பிள்ளை
நித்தம் உன் தொல்லை
விழிகொண்டு வீழ்த்தி
உன் மார்பில்
என் முகம் புதைக்கிறாய்
உன் இடையில்
என் விரல் வளைக்கிறாய்
அதன் மடிப்பில்
எனை திருடுகிறாய்
உன் பாதம் எத்தி
என் மார்பை மிதித்து
உன் பக்கம் இழுத்து
முத்தம் வைக்கிறாய்
இதழ் முத்தம் பறிக்கிறாய்
கட்டிலின்மேல் ராட்சசி நீ
நிதமும் கிடைக்குமா
இதே தரிசனம்?
இந்த தேன் நிலவைப்போல்
எல்லா இரவுகளும்
முதல் இரவுகளாகவே இருக்கட்டும்
முற்றும் துறப்போம்
ஆடைகள் மட்டும் அல்ல
ஆண் பெண்னென்ற பேதங்களையும்
கர்வம் கலைப்போம்
காமம் தீர்ப்போம்
காமம் கடந்து
காதல் வளர்ப்போம்
உன்மேல் நானும்
என்மேல் நீயும்…..
ரொம்பவும் அருமையாக இருந்தது...
ReplyDeletearumai
ReplyDelete