1
ச்சீயர்ஸ்
“மதுவிலக்குன்னு ஒரே ஒரு போராட்டத்த வெச்சு ஆளுங்கட்சியவே ஒரு ஆட்டு ஆட்டிட்டிங்களே தலைவரே” என்று குதூகலித்த சகாவை பார்த்து “ச்சீயர்ஸ்” என்றார் எதிர்கட்சி தலைவர்.
2
ஆஷ்டேக்
கண் எதிரே கத்தி குத்துப்பட்டு கிடந்தவனை கைபேசி கேமிராவில் கிளிக்கிவிட்டு ஆஷ்டேக்குடன் அப்லோடினான் முகப்புத்தகத்தில் #மனிதாபிமானம் எங்கே போனது? என்று.
3
ஆசிட் முட்டை
“அய்யோ.... பிளீஸ் என்ன டார்ச்சர் பன்னாத” என்று கெஞ்சிய மனிமேகலையின் முகத்தை தேடி விரைந்து வந்தது அவன் வீசிய ஆசிட் முட்டை.
4
கேள்வி
நீண்டபெருமூச்சு விட்டபடி முதியோர் இல்லத்திலிருந்து வெளியே வந்த மகேஷிடம் “வயசானதும் உன்னையும் இங்க கூட்டிட்டுவந்து விட்டிடனுமா அப்பா” என்று கேட்டான் மகேஷின் ஐந்து வயது மகன்.
5
“சாதிகள் இல்லையடி பாப்பா”
பரிட்சைக்கு செல்லும் தன் மகளுக்கு “சாதிகள் இல்லையடி பாப்பா” என்ற பாரதியின் வரிகளை சொல்லிகொடுத்துக் கொண்டிருந்தார் அந்த சாதி கட்சி தலைவர்
6
நெருடல்
“கோர்ட்க்கு போய் ஆயிரம் இரண்டாயிரம்ன்னு ஃபைன் கட்டுரியா இல்ல இங்க நூறு ரூவாயோட முடிச்சுக்கரியா” என அதட்டிய ஏட்டு ஏகாம்பரத்திற்கு நெருடலாக இருந்தது “அய்யா சாமி தர்மம் பன்னுங்கயா.....” என்ற பிச்சைகாரனின் குரல்.
7
தர்மம்
“அய்யா சாப்புட்டு நாலு நாள் ஆச்சு தர்மம் பன்னுங்க சாமி” என்று மகேஷின் இரக்கத்தை சம்பாதித்த கிழவன் நேராக டாஸ்மாக்கிற்குள் நுளைந்தான் மகேஷ் தந்த காசோடு.
8
வாட்ஸ்சாப் காதல்
“இது முடிஞ்சுபோச்சு கார்த்திக், நமக்குள்ள இனி செட் ஆகாது” சொல்லிவிட்டு பறந்தாள் ஜெஸ்ஸி. மாலைக்குள் இருவரின் அந்தரங்கங்களை எல்லாம் வாட்ஸ்சாப்பில் உலாவவிட்டான் கார்த்திக்.
9
ஏக்கம்
புதிதாக வாங்கிய கோல ஸ்டிக்கரை விஜயா தரையில் ஒட்டிக்கொண்டிருந்ததை ஏக்கமாக பார்த்துகொண்டிருந்தது பசியில் வந்த எரும்பு கூட்டம்.
10
மூடநம்பிக்கை
“பால் அபிஷேகமா எப்போதான் இந்த மூடநம்பிக்கையில இருந்து வெளிய வர போறியோ” அம்மாவிடம் சலித்துக் கொண்ட சுரேஷ் முதல் ஆளாய் ஏறிகொண்டிருந்தான் சூப்பர் ஸ்டாரின் கட்அவுட்டின் மீது கையில் பால் பாக்கெட்டோடு.
11
அமைதி
“இது என் சம்பாத்தியம். எவனுக்கும் சல்லி பைசாகூட தரமுடியாது” என்று தன் உச்சபட்ச குரலில் கத்திய கோகிலன் ஐஸ்பெட்டிக்குள் வெறும் கையோடு அமைதியாக படுத்துக்கிடந்தான்.
12
அதே இரயில்
ஓடும் இரயிலில் நேற்று காதலை சொன்ன கபிலன் பின்னொருநாளில் தலைசிதறி தண்டவாளத்தில் கிடந்தான். சாதியின் பெருமையை கூவிக்கொண்டே தினமும் கடந்து போகிறது அதே இரயில்.
13
கடைசி உயிர்
எப்படி சொல்வது என்று தெரியாமல் தன் மெட்டல் கைகளை பிசைந்து கொண்டு நின்ற ரோபோ தயங்கி தயங்கி ஒருவழியாக சொன்னது
“சாரி கமாண்டர், மனித இனத்தோட கடைசி உயிரையும் எங்களால காப்பாத்த முடியல”.
14
சிஷ்யன்
“சாதி மதம் கடவுள் இவை மூன்றும் இல்லாமல் இந்த உலகம் எப்படி இருக்கும்” என்று கேள்வி எழுப்பினார் குரு.“அமைதியாக இருக்கும்” என்றான் சிஷ்யன் சாந்தமாக
15
தமிழ்
மியூசியத்தின் தென்கோடியில் கண்ணாடிப் பேழைக்குள் வைக்கபட்டிருந்த எழுத்துக்களை பார்த்த விஷ்வா கேட்டான் “Mom what’s that?”. “mmm…. I think that’s….ah… alphabets from our mother-tounge tamil” என்றாள் அவன் அம்மா.
Sema ji... Superr
ReplyDeleteநன்றி ஜி
DeleteMachan
ReplyDeleteநான் தான்
DeleteSemma bro ✌🙌🙌 naathigam saarndha adhigamana padhvugalai edhirpaarkiren 🙈
ReplyDeleteவிரைவில்......
DeleteSemma bro ✌🙌🙌 naathigam saarndha adhigamana padhvugalai edhirpaarkiren 🙈
ReplyDeleteArumaiiii
ReplyDeleteநன்றி
Delete