Friday, 8 September 2017

எப்போது பேச போகிறோம்.......



ஏன் இவ்வளவு எரிச்சலாக இருக்கிறது எல்லாருக்கும். அப்படி என்ன பேசக் கூடாத விஷயத்தை ரஞ்சித் பேசிவிட்டார். எதற்கு நமக்கு இவ்வளவு அருவருப்பாக இருக்கிறது.நாம் இன்றும் அந்த ஆதிக்க சுகத்தையும், அடக்கி ஆள்கிற ஆசையையும் விரும்புகிறோம், ஆராதிக்கிறோம். அதன் வெளிபாடு இது. ஆகையால் இந்த அடக்குமுறைகளை பற்றியெல்லாம் யாரேனும் பேசினால் நமக்குள் இருக்கிற ஆதிக்க என்னம் அந்த உண்மைய ஏற்க மறுக்கிறது, அய்யய்யோ இந்த ஆதிக்க சுகம் போய்விடுமோ என்ற பயம், அதன் வெளிபாடு தான் இந்த எரிச்சல், இந்த அருவருப்பு எல்லாம். இன்றைக்கு இந்த நிலைக்கு இந்த நாடு, (நாட்ட விடுங்க அது நாசமாக்கிருவானுங்க காவி டவுசருங்க.) நம் தமிழ்நாடு வந்து நிற்பதற்கு காரணம் சாதியும், சாதிய அரசியலும். இதை எப்போது தூக்கி எறியபோகிறோம். இதை தூக்கி எறியாமல் தமிழ்தேசியம் எப்படி சாத்தியம். இதை ரஞ்சித் கேட்டதில் என்ன தவறு இருக்கிறது.1947 ஆகஸ்ட் 15 ஆங்கிலேய அரசின் காலனியாதிக்க ஆட்சி வீழ்ந்ததின் சாட்சியாக அதன் கொடி இறங்கி சுதந்திர இந்திய தேசத்தின் மூவர்ண கொடி மேல் ஏறியது எல்லோரும் கொண்டாடி குதூகலித்தார்கள். அதே வேளையில் இந்த தமிழ் மண்ணில் ஒரு தாடிக் கிழவர் கருப்பு கொடி ஏற்றி சாதி, மத பிடியிலிருந்து இந்த சமூகம் என்று விடுதலை பெருகிறதோ அதுவே சுதந்திரம், அதுவே விடுதலை என்றார். இன்று நாம் பெற்றிருப்பது  உண்மையான சுதந்திரமில்லை இதுவெறும் ஆட்சி மாற்றம். இந்த தினம் ஒரு கருப்பு தினம் என்று எழுதினார், உரக்க முழங்கினார். எல்லோரும் அந்த கிழவரை பைத்தியகாரனை போல் பார்த்தார்கள்.அதற்காக எல்லோராலும் ஏன் தன் சகாக்களால் கூட ஏளனம் செய்யபட்டார், கடுமையாக விமர்சிக்கபட்டார். அவர் ஒரு தீர்க்கதரசி. இன்று நடப்பது என்ன? நாம் சுதந்திரமாக இருக்கிறோமா? சமூக விடுதலை பெற்றுவிட்டோமா? இன்றும் சாதியை தூக்கித்தானே திரிகிறோம். எல்லாம் டிஜிட்டலாகிறது கூடவே சாதியும். இன்னும் எத்தனை காலத்துக்கு இந்த சுமைய தூக்கி சுமக்கபோகிறோம். இந்த சுமையை தூக்கி சுமந்துகொண்டு தமிழ்தேசியத்தை பெற்று என்ன புண்ணியம். சாதியம் ஒழியாமல் சாதிய அரசியல் அகலாமல் பெருகிற எந்த ஒரு சுதந்திரமும் போலி சுதந்திரமே. தமிழ் தேசியம் என்ற இலக்கு சாதியம் ஒழிக்கபட்ட பின்னரே அடையவேண்டும். தமிழ்தேசியம் கிட்டட்டும் பிறகு சாதியை அழித்துவிடலாம் என்று நினைத்தால் வெள்ளையரிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற கதை தான் தமிழ் தேசியத்திற்கும்.
தமிழ் தேசியத்தை பற்றி சிந்திப்பதற்கு முன்னால் தமிழ் தேசியத்தை பற்றி பேசுவதற்கு முன்னால்  சாதியற்ற தமிழகத்தை பற்றி சிந்திப்போம், சாதியத்தின் கொடுமைகளை  அதை ஒழிப்பதை பற்றி பேசுவோம், முரண்களை பேசி தீர்ப்போம். சாதி ஒழியாமல், சமூக விடுதலை சாத்தியமில்லை. இப்படி எல்லாம் பேசுவது அருவருப்பாக இருந்தால், எரிச்சலாக இருந்தால் நீங்கள் இருக்கிற வட்டத்தை விட்டு வெளியே வந்து பாருங்கள். சாதியும் அதன் கோறப்பற்களும்  எத்தனை எத்தனை மனிதர்களை குதறி எறிந்துகொண்டிருக்கிறதென்று.  சாதியை அருவருக்காமல், உடனடியாக அதை அழித்தொழிக்க நினைக்காமல் . சாதிய கொடுமைகளை, சாதிய அடக்குமுறைகளை பற்றி பேசுபவர்களை ஏளனம் செய்கிறோம், இது நேரமில்லை,இது  இடமில்லை என்றெல்லாம் பேச விடாமல் செய்கிறோம். ஏன் நமக்கு அந்த சாதிய கர்வம் வேண்டுமா? இல்லை என்கிறீர்களா? சாதியை பேசுவதற்கும் சாதிய அரசியலை பேசுவதற்கும் இது இடமில்லை என்கிறீர்களா? சரி அப்படியே வைத்துக்கொள்வோம். நம் ஒவ்வோருவருக்குள்ளும்
புரையோடிப்போயிருக்கிற சாதியையும், சாதிய அரசியலையும் அதன் கொடூரங்களையும் இன்றும் பேசவில்லை என்றால் இங்கும் பேசவில்லை என்றால்  எப்போதுதான் பேசப்போகிறோம் எங்குதான் பேசப்போகிறோம்…………


3 comments:

The lunch box

என் அம்மா எப்போதும் சொல்வார் “ சில நேரங்களில், ஒரு தவறான ரயிலால் கூட உங்களைச் சரியான  ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முடியும்” என்று ...