ராம்நாத் கோவிந்த் ஐனாதிபதியாக வெற்றி பெற்றிருக்கிறார். இதன்மூலம் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தன்னிடத்தில் குவித்துவிட்டது பாரதிய ஐனதா கட்சி. இனி இந்த தேசம் என்னவெல்லாம் சந்திக்கும் மெல்ல மெல்ல. எனது சிந்தனைக்குட்பட்டு இனி அறிவிக்கபடாத ஒரு நெருக்கடி நிலை இங்கு பிரகடனபடுத்தபடபோகிறது. இந்த தேசத்தில் மிச்சமிருக்கிற ஐனநாயகமும் திரௌபதியின் சேலையை துரியோதனன் ஆனைபடி துச்சாதனன் உருவியது போல் வெளிப்படையாகவே மோடி சங்கபரிவாரங்களின் கட்டளையின்படி உருவி நிர்வாணபடுத்துவார். காப்பாற்ற எந்த கண்ணனும் எங்கிருந்தும் வரவிடாமல் அத்தனை கண்ணன்களையும் குண்டர்களாக சிறையில் வைத்துவிடுவார்.புதுப் புது இந்தியாக்களை தினம் தினம் நள்ளிரவில் பெற்றெடுத்துக் கொண்டே இருப்பார். மாநில மொழியுரிமைகளை பறிப்பார், கார்பரேட்டுகளை தங்கள் இஷ்டம் போல எங்கு வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்ய சொல்வார். இஸ்லாமியர்களையும், தலித்துகளையும், சிறுபான்மையினர்களையும் தேடித் தேடி நசுக்குவார், உரிமைகளை பிடுங்குவார். காவி டவுசர்கள் நம் காம்பவுன்டிற்குள்ளேயே வந்து ராஜ்ஜியம் நடத்த அனுமதி கொடுப்பார்.நாடெங்கிலும் கோமாதா காவலர்களை வைத்து கால்நடையை நம்பி பிழைப்போரை காயடித்துவிடுவார். பெண்களை வீதியில் நடக்கவும், பேருந்தில் பயணிக்கவும் அச்சபட வைப்பார். பாபர் மசூதி இருந்த இடத்தில் எந்த தடையும் இல்லாமல் சீறும் சிறப்புமாக ராமர் கோயில் கட்டிமுடிப்பார். இந்திய தேசத்தை ஹிந்துஸ்தானம் என்று அதிகார பூர்வமாக அவர் அறிவித்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை. இந்திய ரூபாய் நோட்டுகளில் காந்தியின் முகம் தவிர்க்கபட்டு கோட்சேவின் முகத்தை அவர் பதித்தாலும் பதிக்கலாம். நாடு முழுதும் ராமர் கோயிலுக்கு நிகராக கோட்சேவிற்கு அவரால் ஆலயங்கள் எழுப்பப்படலாம்.இந்தி இந்த தேசத்தின் தேசிய மொழியாகவும், ஒட்டுமொத்த தேசத்தின் அலுவல் மொழியாகவும் ஆக்கிடுவார். ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தன் காலடியில் வைத்து கொண்டு முடிசூடா ஐனநாயக மன்னனாக மோடி கம்பீரமாக வழக்கம் போல ஊர்சுற்றிதிரிய சங்க பரிவாரங்கள் படாடோபமாக படுபயங்கரமான ஆட்சியை நடத்திகொண்டிருக்கும். இது என் சிந்தனைக்குட்பட்டு இந்தியா இத்தனை மாற்றங்களை காணும் என நான் நினைக்கிறேன். இது ஆர் எஸ் எஸின் அஐன்டாவின் சொச்சம் தான், மிச்சத்தை காலம் நம் கண் முன்னால் காட்டும். அதுவரையில் காத்திருப்போம்
மற்றுமொரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுவோம்.......
#வாழ்த்துக்கள்_ராம்நாத்_கோவிந்த்
Thursday, 20 July 2017
வாழ்த்துக்கள் ராம்நாத் கோவிந்த்
Subscribe to:
Post Comments (Atom)
The lunch box
என் அம்மா எப்போதும் சொல்வார் “ சில நேரங்களில், ஒரு தவறான ரயிலால் கூட உங்களைச் சரியான ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முடியும்” என்று ...
-
எனக்கு பெயர் நினைவில்லாத ஒரு நண்பர் பால்கட்டு சிறுகதைப் பற்றி முகநூலில் எழுதியிருந்த பதிவைப் படித்து விட்டுதான் இணையத்தில் துலாவினோன் அமர...
-
என் வெள்ளை காகித வெண்பாக்கள்......... நட்புக்காக, நண்பர்களுக்காக தனியாக தினம் ஒதுக்கி கொண்டாடுவதில் எனக்கு பெரிதாக உடன்பாடு கிடையாது....
-
1 ச்சீயர்ஸ் “ மதுவிலக்குன்னு ஒரே ஒரு போராட்டத்த வெச்சு ஆளுங்கட்சியவே ஒரு ஆட்டு ஆட்டிட்டிங்களே தலைவரே ” என்று குதூகலித்த சகாவை...
Nice ji
ReplyDelete