“பிரபஞ்சன், உங்களுக்கு ரொம்ப புடிக்குமா தோழர்”
வாட்ஸப்பில் வைத்திருந்த பிரபஞ்சனுக்கான எனது அஞ்சலி குறிப்புகளை தோழர் ஒருவர் பார்த்துவிட்டு பிரபஞ்சனைப் பற்றி அறிந்துக் கொள்வதற்காக என்னிடம் பேசினார்.
“அங்க போறிங்களா?”
“ஆமா தோழர்”
“போயிட்டு வாங்க, கடைசியா ஒருதரவ பாத்துட்டு வாங்க”
“கண்டிப்பா தோழர், ஆசானுக்கு என் இறுதி வணக்கத்த செலுத்தனும்ல”
“ அவரோட எழுத்துக்கு எப்போதும் உயிர் இருக்கும் தோழர். கவலைப்படாதிங்க”
ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தவரோடு பிரபஞ்சனைப் பற்றி, பிரபஞ்சனின் எழுத்துக்களைப் பற்றி நிறைய பேசத் தொடங்கியிருந்தபோது சிறிது இடைவெளிக்கு ஆளைக் காணவில்லை. பத்து பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு திரும்பி வந்தார்.
" இந்த கதை படிச்சேன்,ரொம்ப நல்லாருந்துச்சு தோழர்" என்றவர் பிரபஞ்சனின் ‘நாளைக்கும் வரும் கிளிகள்' சிறுகதையின் இணையதள இணைப்பை எனக்கும் தந்தார். பதிலுக்கு நான் ‘ஒரு மனுஷி' சிறுகதையின் இணைப்பை அனுப்பினேன்.
“கண்டிப்பா படிக்கிறேன் தோழர்” என்றவர் வாசிக்க கிளம்பிவிட்டார்.
இதைவிட வேறெப்படி எழுத்தை தன் வாழ்வாக கருதி வாழ்ந்த ஒரு மகத்தான எழுத்தாளனுக்கு அஞ்சலி செலுத்துவது....
பிரபஞ்சன் வாழ்ந்துக் கொண்டுதானிருப்பார்.......
No comments:
Post a Comment