Friday, 18 October 2019

02

பெரியாரை வாசிப்போம் - 02

விபச்சாரித்தனம் என்பதை எவ்வளவோ கண்டிக்கிறோம். அதற்கு சட்ட மூலமாய், சமூக மூலமாய், சாத்திர மூலமாய், இயற்கை மூலமாய் எல்லாம் வைத்திருக்கிறோம். அப்படி எல்லாம் இருந்தும், அதை இருவருக்கும் சமமாய் வைக்கவில்லை.  ஆண் விபச்சாரத்தைப் பற்றி பேசுவோரே கிடையாது. அப்படி இருந்தாலும் அதற்கு பலக் குறைவு (Weakness) என்று சொல்லி விடுகிறோம். பெண் விபச்சாரத்தை நாணயக் குறைவு, ஒழுக்கக் குறைவு, கெட்ட குணம், இகழத்தக்கது, கண்டிக்கத்தக்கது, வெறுக்கத்தக்கது என்றெல்லாம் சொல்கிறோம். ஆணும், பெண்ணும் சேர்ந்தால் தான் விபச்சாரமே தவிர பெண்ணும், பெண்ணும் சேர்ந்து விபச்சாரம் செய்து விட முடியாது. இதை யாரும் விபச்சாரம் என்று சொல்லவும் மாட்டார்கள்.

ஒருவருக்கொரு நீதி என்கின்ற முறையாலோதான் உலகில் பெரிதும் விபச்சாரம் இருந்துவருகிறதே தவிர, பெண்களின் கெட்ட குணங்களால் இருந்து வருவதாகச் சொல்லிவிட முடியாது.

அன்றியும், இவ்வளவு தூரம் மதத்தாலும், சட்டத்தாலும், சமூகத்தாலும், நிபந்தனையாலும், வெறுக்கப்பட்ட விபச்சாரம் என்பது ஏன் இன்று உலகில் சர்வ சாதாரணமாய் இருந்துவருகின்றது. இதற்கு என்ன காரணம் என்பதை யாராவது யோசிக்கிறார்களா?

(குடிஅரசு 16.06.1935)

#periyaraivasipom #periyaraivaasipom
#பெரியாரைவாசிப்போம்
#பெரியார்141 #periyar141

No comments:

Post a Comment

The lunch box

என் அம்மா எப்போதும் சொல்வார் “ சில நேரங்களில், ஒரு தவறான ரயிலால் கூட உங்களைச் சரியான  ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முடியும்” என்று ...