பெரியாரை வாசிப்போம் - 03
ஜீவ சுபாவத்திற்கே பொருந்தாததான
ஒரு நிபந்தனையை நமது சகோதரிகள் மீது சுமத்திக் கொடுமைப்படுத்துவதுதான் விதவைத்தன்மை என்பது எந்த விதத்திலாவது பொருத்தமுடையதா என்பதை ஆலோசித்துப் பாருங்கள் இந்நிலை பெண்களை அடிமைகளாய் நடத்துகின்றோம் என்பது மாத்திரமல்லாமல் நம்மைப் போன்ற மனித ஜீவன்களிடத்தில் நாம் எவ்வளவு கொடுமையாய் - அறிவீனமாய் நடந்துகொள்ளும் சுபாவமுடையவர்களாய் இருக்கின்றோம் என்பதற்கு அறிகுறியாகும்.
பெண்கள் சம்பந்தமான வேறு எந்தக் காரியத்திற்காவது ஆண்கள் தங்கள் சுயநலத்தைக் கொண்டு கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்று சொல்லுவதானாலும், இந்த விதவைத்தன்மையை எதற்காகக் கற்பித்தார்கள் என்பதே நமக்கு விளங்க மாட்டேன் என்கிறது.
இந்த விதவைத்தன்மை ஒழிய வேண்டுமானால் பெண்கள் மிக்க தைரியமாய்ப் பாடுபட வேண்டும். அது விஷயத்தில் மானம் இன்னது, அவமானம் இன்னது என்பதாகவோ அவர்கள் என்ன சொல்வார்கள், இவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதாகவோ சற்றும் கருதாமல் தைரியமாய் வெளிக் கிளம்பிட வேண்டும்.
தங்களுக்கு இஷ்டமான கணவன்மார்களைத் தாங்களே தேர்ந்து எடுத்துக் கொண்டதாய் வெளிப்படுத்திட வேண்டும். இவ் விஷயத்தில் சற்று சவுகரியக்குறைவு இருந்தாலும் அதை வலிமையுடன் பொறுத்துக் கொண்டால் அடுத்துவரும் சகோதரிகளுக்கு மிகுதியும் பலனளிக்கும். நான் ஏன் இப்படிச் சொல்லுகிறேன் என்றால் இதைத் தவிர வேறு மார்க்கமில்லை என்று கண்டதால் தான்.
( தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டுத் தலைமையுரையின் சிறுபகுதி - 26.11.1928)
#periyaraivasipom #periyaraivaasipom
#பெரியாரைவாசிப்போம்
#பெரியார்141 #periyar141
No comments:
Post a Comment