Saturday, 2 May 2020

The lunch box

என் அம்மா எப்போதும் சொல்வார்
“ சில நேரங்களில், ஒரு தவறான ரயிலால் கூட உங்களைச் சரியான  ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முடியும்” என்று நவாஸூதீன் சித்திக் இர்பானிடம் ரயில் பயணத்தின் போது சொல்வார், இர்பான் புன்னகைப்பார்.
அந்த புன்னகை முப்பத்தி ஜந்து வருட அரசுப் பணியில் பணிபுரிந்த, மனைவியை இழந்த பெர்னாண்டஸின் முகத்தில் தவழ நேர்ந்த கதையே The lunch box.

படத்தில் நிறைய காட்சிகள், எழுதத் தொடங்கினால் எழுதிக் கொண்டே போகலாம். வழக்கமாக கணவனக்கென்று ருசி பார்த்து அதில் அன்பையும் சேர்த்து சமைத்து மும்பையின் புகழ்பெற்ற டப்பா வாலக்களின் மூலமாக மதிய உணவை அனுப்பி வைக்கிறாள் இலா. ஒவ்வொருநாளும் அனுப்பிய டிபன் கேரியரில் ழுழுவதுமாக உணவு உண்ணப்படாமலேயே திரும்பி வரும். ஆனால் அன்று மட்டும் வழக்கத்திற்கு மாறாக இலாவின் கணவருக்கு செல்லாமல் டிபன் கேரியர் தவறுதலாக பெர்னாண்டஸிடம் வந்து சேர்கிறது. அன்றைய தினம் டிபன் கேரியரில் வைத்து அனுப்பப்பட்ட உணவு  முழுவதுமாக உண்ணப்பட்டுக் காலியாக திரும்பி வருகிறது.  அதனை எப்போதும் சாப்பாட்டுப் பையினைத் தூக்கிப் பார்த்தே அதைத் தெரிந்துக் கொள்வாள் இலா.  ஒவ்வொருநாளும் அதில் கலந்திருக்கும் அன்பை முகர்ந்து பார்த்தே அறிந்துக் கொள்கிறான் பெர்னாண்டஸ், அதன் பின்னால் டிபன் கேரியர் கனமாக வருவதேயில்லை அவளிடம்.

தன் கணவனிடமிருந்து குறைந்தபட்ச அன்பு கூடக் கிடைக்கப் பெறாத இலா, இளமையிலேயே மனைவியை இழந்து, தான் பார்த்து வருகிற அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறுகிற காலம் வரும் வரையில் தன்னந்தனியாகவே வாழ நேர்ந்த சாஜன் பெர்னாண்டஸ். இவ்விருவருக்கும் இடையில் டிபன் கேரியர் வழியாக டப்பா வாலாக்களின் வழியாக பயணிக்கிற கடித பரிமாற்றமும் அதனூடாக இருவருக்குள்ளும் நிகழத்துவங்குகிற அன்பும் அக்கறையும் கரிசனமும் தான்  'The lunch box'.

தனிமையின் பிடியில் கிட்டத்தட்ட தன் வாழ்நாள் முழுவதையுமே கழித்து விட்ட சாஜன் பெர்ணான்டஸின் கண்களில் எந்நேரமும் இழையோடுகிற மென்சோகத்தை அத்தனை எளிதில் கடந்து விட முடியாது. அது எப்போதும் இர்பான்கானின் கண்களிலேயே தவழுகிற ஒன்றுதான் என்றாலும் கூட அது இந்தப் படத்திற்கும் இந்தக் கதாபாத்திரத்திற்கும் கூடுதல் பலம், உயிர்.

இலாவாக வருகிற நிர்மத் கவுர் ஒவ்வொரு நாளும் தன் கணவனுக்காக ஆசையாசையாக உணவு பதார்த்தங்களை சமைத்து அது எப்படி இருந்தது? என்ன நிறை என்ன குறை? அவனுக்கு அது பிடித்திருந்ததா என்று தெரிந்துக் கொள்ள அவனிடம் கேள்விக் கேட்க பசையற்ற பதில்களையே பெற நேர்கிறது. நம் சமூகத்தில் பெரும்பான்மையான கணவன்கள் அப்படியானவர்கள் தானே! ஏன் இந்த சமூகமும் கூட அப்படித்தானே! மனம் விட்டு  ஒருவரை பாராட்ட எப்போதுமே தயங்குகிற மனிதர்கள் தானே நாம். இலாவின் கணவனும் இந்த சமூகத்தின் சாயலுடனேயே உலாவுகிறான். வேலை, வேலை விட்டு வீடு வந்தால் அலைபேசி. அலைபேசி விட்டால் உறக்கம், உறக்கம் விட்டால் வேலை. அன்பிற்காக ஏங்குகிறாள் இலா. இலா மட்டும் தானா?

இலா, வீட்டு வேலை செய்ய மட்டுமே நிர்பந்திக்கப்பட்டிருக்கிற நம் காலத்து பெண்களின் மனசாட்சி. இலா ; நாம், அதாவது ஆண்கள் எங்கெல்லாம் மாறவேண்டும் எதிலெல்லாம் மாறவேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லிப்போகிறாள்.

தன் வீட்டு பால்கனியில் நின்றுக் கொண்டு யாருமற்ற இருள் படர்ந்த தன் வீட்டின் தனிமை தன்னைச் சூழ்ந்தபடியே புகைப்பிடிக்கிறார் பெர்னாண்டஸ். எதிர் வீட்டில் குடியிருப்பவர்கள் இரவுகளில்  குடும்ப சகிதமாக உணவு உண்ணுவதை அவர்கள் வீட்டு சன்னலின் வழியாக அவர் பார்க்க நேர்கிறது தினமும். அப்படி அவர் எதிர் வீட்டை பார்த்து விட்டு திரும்பிய கையோடு பாலிதின் பைகளில் கட்டி பார்சலாக வாங்கி வந்த உணவுகளை தட்டில் இட்டு உண்ணுகிறார். வீடு முழுவதையுமே இருள் வியாபித்திருக்கிறது.

பெர்னாண்டஸை பார்க்கிற போதெல்லாம் பள்ளிக் காலங்களில் படித்த ஆஸ்கார் வைல்டின் ‘the selfish giant' கதைதான் நினைவுக்கு வருகிறது. தெருவில் கிரிக்கெட் விளையாடுகிற சிறுவர்கள் பெர்னாண்டஸின் வீட்டிற்குள் பந்து விழுந்துவிட அதனை எடுக்க தயங்கித் தயங்கி நுழைவு வாயிற் கதவினருகில் கூட்டமாக நிற்க, வேலை முடிந்து வீடு திரும்புகிற பெர்னாண்டஸ் அந்த குழந்தைகளை கண்டித்து துரத்தி விடுகிற காட்சியில்  அவர் அப்படியே ஆஸ்கார் வைல்டின் கதையில் வரும் அந்த selfish giant தான். இப்படி நிறையக் காட்சிகள்,  படத்தில் குறைவான கதாபாத்திரங்களே தான் என்றாலும் கூட அத்தனையும் நிறைவு.

உறக்கம் தொலைத்த நேற்றைய இரவில்தான் இந்த படத்தினை காண வாய்த்தது. கணத்த இதயத்துடன் தனிமையில் உலாவும் சாஜன் பெர்னாண்டஸை போலவே இரவு முழுவதும் அலைந்திருக்கிறேன்.

இர்பான் காட்சிக்கு காட்சி கலங்கடிக்கிறார். முகத்தில் தவழும் சோகம், கண்களில் உறைந்துப் போயிருக்கும் தனிமை, இலா வந்த பின்னே முகத்தில் தோன்றும் மலர்ச்சி, புன்னகை என்று மனிதர் பெர்னாண்டஸாகவே வாழ்ந்திருக்கிறார்.

பெர்னாண்டஸாக மட்டுமல்ல இன்னும் தான் ஏற்று நடித்துவிட்டு போன பல கதாபாத்திரங்களின் வழியாகவே அவர் என்றென்றும் வாழ்வார். நம்முடனேயே ஜீவித்திருப்பார்.

லவ் யூ இர்பான்.

The lunch box

தற்போது netflixலும் காணலாம்.......




Saturday, 18 April 2020

கெட்டியோலனே என்ட மல்லேக்கா

கெட்டியோலனே என்ட மல்லேக்கா....

வழக்கமாக மலையாளத் திரையுலகம் நிலமும் நிலம் சார்ந்த மனிதர்களும் மனிதர்களின் வாழ்வில் நிகழாமலிருக்கிற  புரிதல்களும் பிரச்சனைகளும் சிக்கலகளும் குறித்தே இந்த படத்திலும் பேசியிருக்கிறது.

பெண்களின் உலகம் ஆண்களின் உலகத்திலிருந்து வேறுபட்டது. முற்றிலும் எதிரானது அல்ல மாறாக இவை இரண்டும் இணைந்து இயங்க வேண்டியது, இதுவே யதார்த்தம்.  ஆனால் யதார்த்தம் இப்படியிருக்க ஆண் உலகம் பெண் உலகத்தினை பற்றிய அடிப்படை புரிதல் கூட இல்லாமல் அடக்கி ஆளவும் ஆட்டிப் படைக்கவும் தங்கள் தேவைக்கும்தான் பெண்கள் என்று கருதிக் கொண்டே பெண் உலகத்தை முற்றிலுமாக சுவீகரித்துக் கொள்கிற வேலையையே ஆயிரமாயிரம் ஆண்டுகளாக செய்து வருகிறது. பலரது உரிமைக் குரலகளினாலும் காத்திரமான போராட்டங்களினாலும் இன்று சில அடிகள் நாம் முன்னேறியிருக்கிறோம், பெண்களின் உலகை புரிந்துக் கொள்ள முன் வந்திருக்கிறோம்,முயற்சிக்கிறோம். அப்படியான புரிதலை ஏற்படுத்த முயன்று வெற்றிப் பெற்றிருக்கிறது, கெட்டியோலனே என்ட மல்லேக்கா.

தன் அம்மாவையும் உறவுக்காரப் பெண்களையும் தாண்டி பெரிதாக பெண்களின் வாடையே படாத சிலிவாச்சன் தன் தாயின் உடல்நலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு ரின்சியை மணமுடிக்கிறான். அவள் அருகாமையை அவனால் எதிர்கொள்ளவே முடிவதில்லை. அவளை நேர்கொண்டு பார்க்க கூட கண் கூசுகிறது. அவள் அருகினில் வந்தால் விலகி ஓடுகிறான். வீட்டிற்கே வரமால் காட்டிலும் மேட்டிலும் குடித்து விட்டு கிடக்கிறான். கட்டியவனை நினைத்து தினம் தினம் ஏங்குகிறாள் ரின்சி. வீட்டிலிருக்கிற அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்கிறாள். அம்மாவை போன்றதொரு மாமியார். ஆனால் கனவன் ஏறெடுத்து கூட பார்க்காமல் தவிர்ப்பதை தாங்கிக் கொள்ள முடியாமல் ரின்சி தவிக்க, ஒரு வார்த்தை அவனோட அன்பாக பேசமாட்டானா என்று ஏங்கி அவனிடமிருந்து அன்பையும் ஆதரவையும நட்பையும் எதிர்பார்த்து அவள் காத்திருக்கிறாள். சிலிவாச்சனோ தன் நண்பர்களின் பேச்சை கேட்டுக் கொண்டு தன் ஆண்மையால் ஆண் பலத்தால் அவளை வெல்ல ஓர் இரவில் கட்டிய்மணைவியான ரின்சியை கற்பளிக்கிறான்.

சிலிவாச்சனை போல இந்த நாட்டில் எத்தனை எத்தனை ஆண்கள்  இருக்கிறார்கள். எல்லா வீட்டிலுமே சிலிவாச்சான்கள் பிறக்கிறார்கள், வளர்க்கப்படுகிறார்கள், வாழ்கிறார்கள். தன் காதலியின் விருப்பத்தையோ மனைவியின் விருப்பத்தையோ அறிந்துக் கொண்டா இங்கே ஆண் பெண் சேர்க்கை நிகழ்கிறது. பெரும்பாலும் ஆண்கள் பெண்களின் துணையை தேடுவதே அவர்களுக்கு ஆக்கி போட்டு, துணி துவைத்து இஸ்திரி போட்டு படுக்கையில் கிடந்துக்  கொண்டு பிள்ளைகள் பெற்றுப் போடத்தானே.

ஒரு பெண் ஒரு ஆணிடம் என்ன எதிர்பார்கிறாள். ஒரு காதலி தன் காதலனிடம் எதை வேண்டுகிறாள், ஒரு மனைவி தன் கனவனிடம் எதை நம்பி வாழ தொடங்குகிறாள்? இந்த கேள்விகள் எதற்குமே ஆண் சமூகம் விடை தேட துணிவதில்லை. பெரும்பாலான ஆண்களின் பார்வைக்கு பெண் கூலி வாங்காத் தொழிலாளி, பிள்ளை பெற்றுப் போடுகிற இயந்திரம். 

சிலிவாச்சனின் தோட்டத்தில் வேலை செய்கிற வயதான பெண்ணொருத்தி சிலிவாச்சன் தன் மனைவியை கற்பழித்த கதை ஊர்முழுக்க பரவிய பிறகு அதை பற்றி பேசும் போது சொல்வாள் “ இந்த ஆம்பளைங்க எப்பவுமே அவங்கள பத்தி மட்டும்தான் யோசிப்பாங்க. ரெண்டு மூனு  புள்ள பெத்துட்டேன்  எப்படி பெத்தேன்னே நியாபகம் இல்ல.” என்று. பிரபஞ்சன் இப்படிச் சொல்லுவார் “ இந்திய சனத்தொகையில்  பெரும்பான்மையோர் வன்புனர்ச்சியில் பிறந்தவர்கள் ஏனெனில், சகாவான பெண் சம்பந்தப்பட்டுத் தாயாவதில்லை, இந்தத் தேசத்தில் காதல் தொழிலில் சம்பங்கு ஆற்றல் பெண், காதலியாகக் கருதப் படலாமோ எனில் மாட்டாள். மாறாக, அவள் சுரண்டப்படும் மற்றுமொரு தொழிலாளியே ஆவாள்” என்று.

பெண்ணின் விருப்பமே இல்லாமல் அவள் விருப்பு வெறுப்புகளை கூட அறிந்துக் கொள்ளாமல் குறைந்தபட்சம் அவளோடு நட்பு கூட பாராட்டமல் அவள் உழைப்பை சுரண்டி  தாலி கட்டிவிட்டோம் என்பதற்காக பெண்களை கற்பழிக்கிற  கனவர்களின் கதை தான் இந்தப் படம். தான் செய்தது தவறு என்பது புரிந்தும் மன்னிப்பு கேட்க கூட துணியாத ஆண்டான்டு கால ஆணாதிக்க மனநிலையோடு தன் எதிரில் அமர்ந்து “அன்னிக்கு நடந்த்த பெருசா எடுத்துக்காத மறந்திடு” என்று மட்டும் சொல்ல முடிந்த சிலிவாச்சனிடம் ரின்சி கொந்தளிக்கிற காட்சியில் ரின்சியாக நடித்தவரின் கண்களை பார்க்க வேண்டுமே சுட்டு பொசுக்குகிறது. குற்றவுணர்வில் ஆழ்த்துகிறது. ரின்சியாக நடித்தவர் ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டியிருக்கிறார், கலங்கடிக்கிறார்.

சிலிவாச்சன் ஆண் உலகின் பொருக்கியெடுத்த ஒரு பானைக்கு ஒரு சோற்றுப் பதமாகவே காட்சிக்கு காட்சி வருகிறார். தன்னை சுற்றியிருக்கிற எல்லோரையும் ஏன் ஆட்டையும் மாட்டையும் கூட நேசித்து பாதுக்காக்கிற ஆணாக இருந்தாலும் மனைவியை கண்டால் ஓடி ஒளிந்துக் கொள்கிற ஒவ்வொரு காட்சியிலும் சராசரி ஆணாகவே வாழ்ந்திருக்கிறார். ரின்சியின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிற இடங்களில் அத்தனை யதார்த்தம் அவர் நடிப்பில்.
தன் மனைவிக்கு தன்னிடமிருந்து என்ன தேவைப்படுகிறது. அவள் எதை எதிர்பார்க்கிறாள் என்று புரியாமல் குழம்பி தன் தோட்டத்தில் வேலை செய்கிற கூலித் தொழிலாளியான கோபி சேட்டனிடம் ஆற்றங்கரையில் அமர்ந்து வாழ்க்கை பாடம் படிக்கிற இடம், தரிசனம்.

அந்த தரிசனத்துக்கு சிலிவாச்சன் முகம் கொடுத்தானா? இல்லையா? ரின்சி அவனை மன்னித்தாளா இல்லையா? சிலிவாச்சன் ரின்சி வாழ்க்கை என்ன ஆனது? அதுவே கெட்டியோலனே என்ட மல்லாக்க திரைப்படம்.

சத்தமில்லாமல் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் நிகழ்கிற வன்புனர்வை பேசு பொருளாக்கி, வழக்காமாக மலையாளத் திரைபடங்களில் வருகிற நிலமும் நிலம் சார்ந்த மனிதர்களிடம் அந்த பிரச்சனையை கொண்டு சென்று அதனை ஊர் முழுக்க பரவ விட்டு  ஊரார் ஒவ்வொருவரின் பார்வையையும் பதியவைத்திருக்கிறார் இயக்குனர்.
இந்த சமூகம் பெண்ணை என்னவாக பார்க்கிறது என்னவாக நடத்துகிறது என்று தெளிவாக பதியவைத்ததோடு அல்லாமல் பெண்ணுக்கு ஒரு ஆணிடமிருந்து என்ன தேவை என்பதையும் உணர வைத்திருப்பதில் இந்த படம் வெற்றிப் பெற்றிருக்கிறது.

கெட்டியோலனே என்ட மல்லக்கா

கெட்டியோலனே என்ட மல்லேக்கா....

வழக்கமாக மலையாளத் திரையுலகம் நிலமும் நிலம் சார்ந்த மனிதர்களும் மனிதர்களின் வாழ்வில் நிகழாமலிருக்கிற  புரிதல்களும் பிரச்சனைகளும் சிக்கலகளும் குறித்தே இந்த படத்திலும் பேசியிருக்கிறது.
பெண்களின் உலகம் ஆண்களின் உலகத்திலிருந்து வேறுபட்டது. முற்றிலும் எதிரானது அல்ல மாறாக இவை இரண்டும் இணைந்து இயங்க வேண்டியது, இதுவே யதார்த்தம்.  ஆனால் யதார்த்தம் இப்படியிருக்க ஆண் உலகம் பெண் உலகத்தினை பற்றிய அடிப்படை புரிதல் கூட இல்லாமல் அடக்கி ஆளவும் ஆட்டிப் படைக்கவும் தங்கள் தேவைக்கும்தான் பெண்கள் என்று கருதிக் கொண்டே பெண் உலகத்தை முற்றிலுமாக சுவீகரித்துக் கொள்கிற வேலையையே ஆயிரமாயிரம் ஆண்டுகளாக செய்து வருகிறது. பலரது உரிமைக் குரலகளினாலும் காத்திரமான போராட்டங்களினாலும் இன்று சில அடிகள் நாம் முன்னேறியிருக்கிறோம், பெண்களின் உலகை புரிந்துக் கொள்ள முன் வந்திருக்கிறோம்,முயற்சிக்கிறோம். அப்படியான புரிதலை ஏற்படுத்த முயன்று வெற்றிப் பெற்றிருக்கிறது, கெட்டியோலனே என்ட மல்லேக்கா.

தன் அம்மாவையும் உறவுக்காரப் பெண்களையும் தாண்டி பெரிதாக பெண்களின் வாடையே படாத சிலிவாச்சன் தன் தாயின் உடல்நலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு ரின்சியை மணமுடிக்கிறான். அவள் அருகாமையை அவனால் எதிர்கொள்ளவே முடிவதில்லை. அவளை நேர்கொண்டு பார்க்க கூட கண் கூசுகிறது. அவள் அருகினில் வந்தால் விலகி ஓடுகிறான். வீட்டிற்கே வரமால் காட்டிலும் மேட்டிலும் குடித்து விட்டு கிடக்கிறான். கட்டியவனை நினைத்து தினம் தினம் ஏங்குகிறாள் ரின்சி. வீட்டிலிருக்கிற அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்கிறாள். அம்மாவை போன்றதொரு மாமியார். ஆனால் கனவன் ஏறெடுத்து கூட பார்க்காமல் தவிர்ப்பதை தாங்கிக் கொள்ள முடியாமல் ரின்சி தவிக்க, ஒரு வார்த்தை அவனோட அன்பாக பேசமாட்டானா என்று ஏங்கி அவனிடமிருந்து அன்பையும் ஆதரவையும நட்பையும் எதிர்பார்த்து அவள் காத்திருக்கிறாள். சிலிவாச்சனோ தன் நண்பர்களின் பேச்சை கேட்டுக் கொண்டு தன் ஆண்மையால் ஆண் பலத்தால் அவளை வெல்ல ஓர் இரவில் கட்டிய்மணைவியான ரின்சியை கற்பளிக்கிறான்.

சிலிவாச்சனை போல இந்த நாட்டில் எத்தனை எத்தனை ஆண்கள்  இருக்கிறார்கள். எல்லா வீட்டிலுமே சிலிவாச்சான்கள் பிறக்கிறார்கள், வளர்க்கப்படுகிறார்கள், வாழ்கிறார்கள். தன் காதலியின் விருப்பத்தையோ மனைவியின் விருப்பத்தையோ அறிந்துக் கொண்டா இங்கே ஆண் பெண் சேர்க்கை நிகழ்கிறது. பெரும்பாலும் ஆண்கள் பெண்களின் துணையை தேடுவதே அவர்களுக்கு ஆக்கி போட்டு, துணி துவைத்து இஸ்திரி போட்டு படுக்கையில் கிடந்துக்  கொண்டு பிள்ளைகள் பெற்றுப் போடத்தானே.

ஒரு பெண் ஒரு ஆணிடம் என்ன எதிர்பார்கிறாள். ஒரு காதலி தன் காதலனிடம் எதை வேண்டுகிறாள், ஒரு மனைவி தன் கனவனிடம் எதை நம்பி வாழ தொடங்குகிறாள்? இந்த கேள்விகள் எதற்குமே ஆண் சமூகம் விடை தேட துணிவதில்லை. பெரும்பாலான ஆண்களின் பார்வைக்கு பெண் கூலி வாங்காத் தொழிலாளி, பிள்ளை பெற்றுப் போடுகிற இயந்திரம். 

சிலிவாச்சனின் தோட்டத்தில் வேலை செய்கிற வயதான பெண்ணொருத்தி சிலிவாச்சன் தன் மனைவியை கற்பழித்த கதை ஊர்முழுக்க பரவிய பிறகு அதை பற்றி பேசும் போது சொல்வாள் “ இந்த ஆம்பளைங்க எப்பவுமே அவங்கள பத்தி மட்டும்தான் யோசிப்பாங்க. ரெண்டு மூனு  புள்ள பெத்துட்டேன்  எப்படி பெத்தேன்னே நியாபகம் இல்ல.” என்று. பிரபஞ்சன் இப்படிச் சொல்லுவார் “ இந்திய சனத்தொகையில்  பெரும்பான்மையோர் வன்புனர்ச்சியில் பிறந்தவர்கள் ஏனெனில், சகாவான பெண் சம்பந்தப்பட்டுத் தாயாவதில்லை, இந்தத் தேசத்தில் காதல் தொழிலில் சம்பங்கு ஆற்றல் பெண், காதலியாகக் கருதப் படலாமோ எனில் மாட்டாள். மாறாக, அவள் சுரண்டப்படும் மற்றுமொரு தொழிலாளியே ஆவாள்” என்று.

பெண்ணின் விருப்பமே இல்லாமல் அவள் விருப்பு வெறுப்புகளை கூட அறிந்துக் கொள்ளாமல் குறைந்தபட்சம் அவளோடு நட்பு கூட பாராட்டமல் அவள் உழைப்பை சுரண்டி  தாலி கட்டிவிட்டோம் என்பதற்காக பெண்களை கற்பழிக்கிற  கனவர்களின் கதை தான் இந்தப் படம். தான் செய்தது தவறு என்பது புரிந்தும் மன்னிப்பு கேட்க கூட துணியாத ஆண்டான்டு கால ஆணாதிக்க மனநிலையோடு தன் எதிரில் அமர்ந்து “அன்னிக்கு நடந்த்த பெருசா எடுத்துக்காத மறந்திடு” என்று மட்டும் சொல்ல முடிந்த சிலிவாச்சனிடம் ரின்சி கொந்தளிக்கிற காட்சியில் ரின்சியாக நடித்தவரின் கண்களை பார்க்க வேண்டுமே சுட்டு பொசுக்குகிறது. குற்றவுணர்வில் ஆழ்த்துகிறது. ரின்சியாக நடித்தவர் ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டியிருக்கிறார், கலங்கடிக்கிறார்.

சிலிவாச்சன் ஆண் உலகின் பொருக்கியெடுத்த ஒரு பானைக்கு ஒரு சோற்றுப் பதமாகவே காட்சிக்கு காட்சி வருகிறார். தன்னை சுற்றியிருக்கிற எல்லோரையும் ஏன் ஆட்டையும் மாட்டையும் கூட நேசித்து பாதுக்காக்கிற ஆணாக இருந்தாலும் மனைவியை கண்டால் ஓடி ஒளிந்துக் கொள்கிற ஒவ்வொரு காட்சியிலும் சராசரி ஆணாகவே வாழ்ந்திருக்கிறார். ரின்சியின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிற இடங்களில் அத்தனை யதார்த்தம் அவர் நடிப்பில்.
தன் மனைவிக்கு தன்னிடமிருந்து என்ன தேவைப்படுகிறது. அவள் எதை எதிர்பார்க்கிறாள் என்று புரியாமல் குழம்பி தன் தோட்டத்தில் வேலை செய்கிற கூலித் தொழிலாளியான கோபி சேட்டனிடம் ஆற்றங்கரையில் அமர்ந்து வாழ்க்கை பாடம் படிக்கிற இடம், தரிசனம்.

அந்த தரிசனத்துக்கு சிலிவாச்சன் முகம் கொடுத்தானா? இல்லையா? ரின்சி அவனை மன்னித்தாளா இல்லையா? சிலிவாச்சன் ரின்சி வாழ்க்கை என்ன ஆனது? அதுவே கெட்டியோலனே என்ட மல்லாக்க திரைப்படம்.

சத்தமில்லாமல் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் நிகழ்கிற வன்புனர்வை பேசு பொருளாக்கி, வழக்காமாக மலையாளத் திரைபடங்களில் வருகிற நிலமும் நிலம் சார்ந்த மனிதர்களிடம் அந்த பிரச்சனையை கொண்டு சென்று அதனை ஊர் முழுக்க பரவ விட்டு  ஊரார் ஒவ்வொருவரின் பார்வையையும் பதியவைத்திருக்கிறார் இயக்குனர்.
இந்த சமூகம் பெண்ணை என்னவாக பார்க்கிறது என்னவாக நடத்துகிறது என்று தெளிவாக பதியவைத்ததோடு அல்லாமல் பெண்ணுக்கு ஒரு ஆணிடமிருந்து என்ன தேவை என்பதையும் உணர வைத்திருப்பதில் இந்த படம் வெற்றிப் பெற்றிருக்கிறது.

Tuesday, 21 January 2020

வெறுமையின் வெளிச்சம்

ஏதோவொன்றிலிருந்து விடுபட
எப்போதும் ஏதோவொன்றைத் தேடி
அலைந்தபடியே இருக்கிறேன்
ஏதோவொன்றை தேடிப் பிடித்து பற்றிக்கொண்டால்
அது பாடாய் படுத்துகிறது
பைத்தியம் பிடித்துவிடும்போலிருக்கிறது
எனக்குள்ளே எனக்காகவென்று எப்போதும் இருக்கிற இரைச்சல் போதாதென்று இவைகள் வேறு
விழிகளை மூடி படுக்கையில் கவிழ்ந்தால்
விழிகள் பிதுங்கிக் கொண்டு
இமைகளை துருத்துகிறது
உறக்கத்தை தொலைத்து வருடங்களாகின்றன
உறங்குவதற்கு ஒரு மடி தேடியே
சதா அலைகிறேன்
சாத்தானின் மடிக்கு கூட சாத்தியமில்லாமலாகிறபோது
அமைதிக்கு நான் எங்கே போவது
யாரை தேடுவது
அறை முழுவுதும் புகையின் நெடி
சாராய நாற்றம்
வெறுமையே வெளிச்சம்
மீதமாய் கிடைத்த சில்லைறைகளையெல்லாம்
அடுக்கி வைத்து அண்ணாந்து பார்க்கிறேன்
இந்த வாழ்க்கை  இந்த அமைதி
என்னை ஒரு பிச்சைக்காரனாய் பார்க்கிறது
இன்னமும் நான் ஏதோவொன்றிலிருந்து விடுபட
ஏதோவொன்றை பற்றிக்கொள்ள
அலைந்தபடியே இருக்கிறேன்






Sunday, 24 November 2019

அவைகள் எங்கிருந்து கிளம்பி வருகின்றன
உறுதியாக சொல்ல முடியவில்லை. கறையான்களை போல யாருக்கும் தெரியாமலேயே வருகின்றன.
நின்று நிதானமாக
கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல்
வயிற் புடைக்க தின்று தீர்த்தது அவைகளுக்கு போதாதாம்
பற்களை கூர் தீட்டிக் கொண்டு விடிந்ததும் வருமாம்
சொல்லிவிட்டு செல்கின்றன.
இப்போது
அவைகள் எங்கு செல்கின்றன?
நம்புங்கள்!
எனக்கெதுவும் தெரியவில்லை

Saturday, 19 October 2019

05

பெரியாரை வாசிப்போம் – 05

இதுவரையில் காலம் எப்படிக் கழிந்து இருந்தாலும் இனிமேலாவது மனித சமுதாயம் பயமும் கவலையுமற்று, சாந்தியாய், திருப்தியாய் நல்வாழ்வு வாழ வேண்டியது அவசியமாகும். அதற்கு ஏற்ற வண்ணம் இனி சமுதாய ஒழுங்குகள், ஒழுக்கங்கள் அமைக்கப்பட வேண்டும். வருங்காலம் பயங்கரமான ஆபத்துக்குள்ளாகும் காலம்.

எப்படி எனில், மக்கள் இனி சுலபத்தில் சாகமாட்டார்கள். இதுவரை நம் மக்களுக்கு சராசரி ஆயுள் 25 என்றால், இனி மக்கள் சராசரி ஆயுள் வயது 50க்கும் மேற்பட்டுத்தான் இருக்க முடியும். சுகாதாரம் அதிகம்; வைத்திய வசதி அதிகம். மனிதன் நோய்களையும், துன்பங்களையும் கடவுள் மீது பாரத்தைப் போட்டுவிட்டு அற்பாயுளாகப் போய்க் கொண்டு இருந்தவன், தன் முயற்சியில் நம்பிக்கை வைத்துப் பரிகாரம் தேடி மீளுகிறான். மனிதனுக்குப் பல துறைகளில் அறிவு உணர்ச்சி ஏற்பட்டு, வாழ்வை நீட்டிக் கொள்ள வசதி பெற்றுவிட்டான்.

இது போலவே, மக்கள் பிறப்பும் அதிகமாகிவிட்டது. கர்ப்பச் சிதைவு, சிசு மரணம், பிரசவ மரணம் இனி சுலபத்தில் ஏற்படாத மாதிரி பாதுகாப்புகள், பரிகாரங்கள் ஏற்பட்டு விட்டன. இனி மலடும் இருப்பதற்கு இல்லாமல் நிவர்த்தி மார்க்கங்கள் ஏற்பட்டு விட்டன. இனி விதவைகளாகவும் எவரும் காலம் கழிக்க முடியாமல் விதவை மணம், சுதந்திர காதல் முதலியன செலவாக்குப் பெற்று, சாதாரணமாய் நடப்பில் வருவதின் மூலம் அவற்றாலும் பிறப்பு அதிகமாகின்றது.

பொதுவாக, பிறப்பு விகிதங்களும் பலவகை சவுகரியங்களால் நபர் 1–க்கு 2,3,4 என்பதாகக் குழந்தைகள் இருந்து வந்தது மாறி, இப்பொழுது நபர் 6,8,10,12 என்பதாகக் குழந்தைகள் பிறப்பதும், அவைகளும் நீண்ட நாள் வாழ்வதுமாக இருக்கின்றன. இவர்களுக்கு எல்லாம் உணவு, போக போக்கியப் பொருள், பிழைப்பு, நல்வாழ்வு ஆகியவை தேவைப்படுவதுடன் உணவுப் பஞ்சம் ஏற்பட்டே தீரும். இவைகளில் பெரும் போட்டியும் அதன் பயனாய் வெறுப்பு, வஞ்சகம், துரோகம், கொள்ளை, கொலை முதலியவைகள் மலிந்துவிடும். சாதுவும் யோக்கியமுமான மக்கள் மிகமிகத் துன்பமடைய நேரிடும். அயோக்கியர்களும் காலிகளுமே நல்வாழ்வு வாழ்வார்கள். அதற்கேற்ற அரசாங்கந்தான் ஏற்பட முடியும்.

('குடி அரசு' கட்டுரை-7.5.1949)

#periyaraivasipom #periyaraivaasipom
#பெரியாரைவாசிப்போம்
#பெரியார்141 #periyar141

The lunch box

என் அம்மா எப்போதும் சொல்வார் “ சில நேரங்களில், ஒரு தவறான ரயிலால் கூட உங்களைச் சரியான  ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முடியும்” என்று ...