Monday, 16 July 2018

புதுசா யாராவது வரனும்

சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் நடந்த உரையாடல்

" எல்லா வக்காளவோளிங்களும் திருட்டு கம்முனாட்டிங்க. இனிமே இவனுங்க யாருக்கும் ஓட்டு போட கூடாது" ஏதோ ஒரு தொலைக்காட்சி செய்தியை பார்த்துக் கொண்டிருந்தபோது ஆவேசமாய் அம்மா பேசியதாக நினைவு.

"சரி வேற யாருக்கு ஓட்டு போடுறது"

" புதுசாதான் யாராவது வரணும் இவனுங்களுக்கு ஆப்பு வைக்கிற மாதிரி"

"அதான் யாரு? எங்கிருந்து வரணும்"

"யாராவதுதான். படிச்சவங்க இளைஞர்கள்"

" சரி அப்ப நான் போகட்டா அரசியலுக்கு"

"....."

நீண்ட மவுனம்

"சொல்லும்மா"

"அது எப்படி. போராட்டம் கீராட்டம் அரசியல் அது இதுன்னு நீ போயிட்டா யாரு குடும்பத்த பாக்குறது, நமக்குன்னு சொந்தமா ஒரு வீடு வாங்கணும், தங்கச்சிய கல்யாணம் பண்ணி குடுக்குணும், உனக்கு கல்யாணம் பண்ணும்....."

"போதும்..... போதும்....." நான் நிறுத்தினேன் ஏனெனில் நீண்டதொரு பட்டியல் அது. மனப்பாடமாக இருக்கிறது.

"...."

"நாங்க போராடக் கூடாது. நல்லவன்தான் அரசியலுக்கு வரணும், அதுவும் படிச்ச இளைஞராதான் வரணும் அப்படி வரவனும் நம்ம வீட்ல இருந்து போக கூடாது. இதுக்குன்னு எவனையாவது எவன் வூட்லயாவது  நேந்து உட்ருப்பானுங்க அவன் வந்துதான் இதெல்லாம் செய்யனும் அப்படித்தானே"

"சும்மா எதுக்கெடுத்தாலும் விதன்டா வாதமா பேசிக்கிட்டு" என திட்டிக்கொண்டே எழுந்துச் சென்றார். பதில் ஏதும் இல்லை, ஒருநாளும் இதுபோன்றவர்களிடம் பதில் இருக்கபோவதுமில்லை. கேள்வி மட்டும்தான், அடுக்கடுக்கான பல கேள்விகள்.

உள்ளபடியே இதுபோன்ற பெற்றோர்கள்தான் இந்த சமூகத்துக்கு கேடு. Careerதான் முக்கியம், காசு பணம் நகை நட்டு சம்பாதிக்கனும் என்று சதா சிந்தித்து பிள்ளைகளையும் சிந்திக்கத் தூண்டுகிற இவர்களே நோய். ஒரு தலைமுறையே மழுங்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

தாய் தகப்பன் என்றெல்லாம் புனிதப்படுத்த வேண்டிய அவசியமில்லை. இந்த தலைமுறை இப்படி இருப்பதற்கு பெற்றோர்களே காரணம். நாளைய தலைமுறையும் இதுபோலவே இருப்பதற்கு நாம் காரணமாக இருந்துவிடக் கூடாது.

பிரபஞ்சன் சொல்கிறார் "சுதந்திரம் போராடுகிறவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்"

No comments:

Post a Comment

The lunch box

என் அம்மா எப்போதும் சொல்வார் “ சில நேரங்களில், ஒரு தவறான ரயிலால் கூட உங்களைச் சரியான  ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முடியும்” என்று ...